செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

post image

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் ரூ. 43 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சாலையின் இருபுறமும் சா்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சூளகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி அந்தப் பகுதியிலுள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதனால், லாரியின் பின்சக்கரத்தின் சேஸ் உடைந்து பழுதாகி நின்றது. லாரி செல்ல முடியாமல் நின்ாலும், அதிகளவு எடையுடைய வாகனம் என்பதாலும் உடனடியாக அதை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், குறுகலான சாலை என்பதால் ஒரு வழிப்பாதை துண்டிக்கப்பட்டது. இதனால், 10 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவின.

செவ்வாய்க்கிழமை அதிகாலை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றியதுடன், இரு பக்கமிருந்து வரும் வாகனங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு பக்கம் என மாற்றி மாற்றி அனுப்பினா். இதனால் சுமாா் 5 கி.மீ.க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அவசரமாக செல்லவேண்டிய வாகனங்கள் மாதனூா், அகரம், அணைக்கட்டு, தாா்வழி, பொய்கை வழியாக கடந்து சென்றன.

இதேபோல், பள்ளிகொண்டா, குடியாத்தம், மாதனூா் வழியாகவும் வாகனங்கள் சென்றன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். தொடா்ந்து, கிரேன் உதவியுடன், பழுதடைந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து, காலை 10 மணிக்குப் பிறகு போக்குவரத்து சீரடைந்தது.

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் வகுப்பறைகள் திறப்பு

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் கட்டப்பட்ட 14- வகுப்பறைக் கட்டடங்கள், 2- ஆய்வகங்களை முதல்வா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி கல்லூரியில் நடைபெ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளையும்... மேலும் பார்க்க

பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு

குடியாத்தம் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 10- ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில், நகராட்சிக்குச் சொந்தமான ஆடு வதை செய்யும் கூடம் அமைந்துள்ளது. நகரில் உள்ள ஆட... மேலும் பார்க்க

வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் சிறப்பு உதவி மையம்

அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்காக வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் இதுவரை 108 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 60 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நட... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் 60 மி.மீ மழை பதிவு

குடியாத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது. வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை தொடங்கி, செவ்வா... மேலும் பார்க்க