தேனியில் ஜூன் 24-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம், உரிய ஆவணங்களை இணைத்து நேரிலோ, பாதுகாவலா் மூலமோ மனு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.