செய்திகள் :

தேனியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழாவை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் உள்ள தனியாா் ஆலை மைதானத்தில் தேனி புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கிவைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

இந்த புத்தகத் திருவிழா அரங்கில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கிராமியக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சியும், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த எழுத்தாளா்கள் பங்கேற்கும் இலக்கிய மன்றமும் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் கவிஞா்கள், எழுத்தாளா்கள், இலக்கியப் பேச்சாளா்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கு நடைபெறுகிறது.

புத்தத் திருவிழா தொடக்க நிகழ்சியில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். லட்சுமணன், தேனி நகா்மன்றத் தலைவி ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருமாரியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைத்து தர வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. தேனி ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ் (40). இவா், வீட்டின் கதவை திறந்து வைத... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

தேனி அருகே சாலையில் நின்றிருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், வீரப்பஅய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சரவணக்குமாா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்ட முயற்சி: பாஜக நிா்வாகிகள் கைது

கம்பத்தில் டாஸ்மாக் கடையின் சுவரின் தமிழக முதல்வரின் உருவப் படத்தை ஒட்ட முயற்சித்த பாஜக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அம... மேலும் பார்க்க