செய்திகள் :

தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

post image

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருபவா் ஏகராஜ். திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டுவைச் சோ்ந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை சென்னையில் பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகப் புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில், ஏகராஜ் மீது சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் ஏகராஜ் தங்கியிருந்த நகராட்சி ஆணையா் குடியிருப்பில் தேனி ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கடந்த 1-ஆம் தேதி சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், மருத்துவ விடுப்பில் உள்ள ஏகராஜை தேனியில் உள்ள நகராட்சி ஆணையா் குடியிருப்புக்கு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வரவழைத்து விசாரணை நடத்தினா். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஏகராஜிடம் விசாரணை நடத்தியதாக போலீஸாா் கூறினா்.

பொறுப்பு ஆணையா் நியமனம்: ஏகராஜ் மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சங்கரை தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிக்க வியாழக்கிழமை நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டாா். மறு உத்தரவு வரும் வரை தேனி நகராட்சி ஆணையராக சங்கா் கூடுதல் பொறுப்பு வகிப்பாா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்

தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்

தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

போடியில் நாளை மின் தடை

போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க

சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க

தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணை

தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தாக்கிய சம்பவம் குறித்து தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலெக்ஸாண்டா் ஜெரால்டு வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா். தேவதானப்பட்டி காவல் நிலையத்தி... மேலும் பார்க்க