செய்திகள் :

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' - சீமான் கேள்வி

post image

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்திற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட மலை மாடுகள் அழைத்து வரப்பட்டன. மாடுகளை மேய்த்துக் கொண்டு சீமான் செல்லும்போது போராட்டத்தை நிறுத்தச் சொல்லி வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாடுகள் வனப்பகுதிக்குள் நுழைவதற்குத் தடையாக பேரிகார்டுகளையும் வைத்து வழியை மறைத்தனர்.

மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட மாடுகள்

நாம் தமிழர் கட்சியினர் தடையை அகற்றச் சொல்லி பேரிகார்டுகளை பிடித்து இழுத்ததால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேரிகார்டுகளை அகற்றிவிட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். இதனிடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் மாடு மேய்ப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை. இந்த காடு சிங்கம் புலிகளுக்கு மட்டும் தானா ஆடு மாடுகளை எங்கு கொண்டு போய் மேய்ப்பது?.

தேனியில் உள்ள மாடுகளுக்கு பெயரே மலை மாடுகள் தான். இதே மலைகளில் தான் ஆடு மாடுகளை மேய்த்து வந்தார்கள் வனத்துறை இதற்கு தடை விதித்தால் ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் தற்போது ஐந்தாயிரமாக சுருங்கி விட்டன. புதுகோட்டை, சிவகங்கை பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போகிறது மாடு மேய்க்கும் கீதாரிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

தடையை மீறி மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர்.

வனப்பகுதிகளில் மாடுகள் மேய்க்க கூடாது எனில் மேய்ப்பதற்கு மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யமால் மாடு மேய்ப்பதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலைகளில் ஆடு மாடுகள் மேய்வதால் மலையில் தீ பற்றினாலும் அது பரவாமல் தடுக்கபடும். ஆடு மாடுகளின் சாணம் மண்ணிற்கு உரமாகும். காடு செழிப்படையும். மலைகளில் ஆடு மாடு மேய்ப்பதைத் தடுத்தால் திரும்பவும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்" என்றார்.

புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த சத்யபால் மாலிக்?

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போதும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியபோதும் அங்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் (79) இன்று காலமானார்.கிட்னி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு டெல... மேலும் பார்க்க

"முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள்" - ஜெயக்குமார் காட்டம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிராக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார். திமுக தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்க... மேலும் பார்க்க

புதுச்சேரி: `செவிலியர் பணிகளை கொல்லைப்புறமாக நியமிக்க ஜிப்மர் திட்டமிடுகிறது’ - எச்சரிக்கும் திமுக

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய... மேலும் பார்க்க

வேலூர்: குண்டும், குழியுமான சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய கவுன்சிலர் - மேயருடன் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் லோகநாதன். சுயேட்சையாக வெற்றிப்பெற்ற இவர், தற்போது அ.தி.மு.க ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தன் வார்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதிகளில் சாலை, கால... மேலும் பார்க்க

'திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வெளிச்சம் அதிகமாக இருக்கிறது, ஆனா.!'- விஜய்யை சாடிய சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று( ஆகஸ்ட் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அதில் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடிப் பேசியிருக்கிறார். "திரைப்புகழ் இருப்பதால் அவருக்கான வ... மேலும் பார்க்க

J&K : 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் - நடந்த மாற்றங்கள் என்ன? எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர்?

அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக (UT) மறுசீரமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிவடைகிறது.மற்ற மாநிலங்களுடன் ஜம்மு & காஷ்மீர் நெருக்காம... மேலும் பார்க்க