செய்திகள் :

தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து முடிவு: தமிழிசை பேட்டி

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் கலந்துபேசி முடிவெடுப்பார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:

"அரசு செலவில் பல கோடி ரூபாயை திமுக தமது தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதுபோல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் உள்ளது. கடந்த 4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாகக் கூறுகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை அறிய முடிகிறது. தவிர, மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை என்பது வேதனை அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருவதை மிகப்பெருமையாக கருதுகிறோம். கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமையை உணர்த்த பிரதமர் வர வேண்டி உள்ளது. பிரதமர் வருகை பாஜகவினருக்கு புத்துணர்ச்சி தரும்.

காமராஜர் உள்பட அனைத்து தலைவர்களும் இகழப்பட வேண்டும் என்பதும் கருணாநிதியை மட்டுமே பெருமையாகக் கருத வேண்டும் என்பதுதான் திமுகவினர் நோக்கம்.

சீமான், விஜய் ஆகியோரை கூட்டணிக்கு அழைப்பது எடப்பாடி பழனிச்சாமியின் நிலைபாடு. பாஜக, அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.

ஆனால் திமுக கூட்டணிதான் தெளிவில்லை. திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், செல்வப் பெருந்தகை, கம்யூனிஸ்ட் தலைவர்கள் திமுக கூட்டணியில் தங்களுக்கு எத்தனை இடம் வேண்டும் என இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.

குரூப் 4 தேர்வில் குளறுபடி இருப்பதாக அதிமுகபோல் பாஜகவுக்கும் கருத்து உள்ளது. தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

துணை குடியரசுத்தலைவர் ராஜிநாமா குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர் அடுத்த துணை குடியரசுத்தலைவராக வர வாய்ப்புள்ளதா என கூறக்கூடிய இடத்தில் நான் இல்லை" என்றார்.

Tamilisai Soundararajan has said that Amit Shah and Edappadi Palaniswami will discuss and decide on a coalition government after the Tamil Nadu Assembly elections.

மருத்துவமனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

பாமக பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்த தடைக் கோரி மனு!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.பாமகவின் ராமதாஸ்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவா... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு: கூடுதலாக இடம்பெற்ற தமிழக இடங்கள்

தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது. இதையடுத்து, மாநில மருத... மேலும் பார்க்க

மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கா... மேலும் பார்க்க

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் ... மேலும் பார்க்க