செய்திகள் :

தொண்டியில் தமுமுக 31-ஆவது ஆண்டு விழா

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) 31-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய தமுமுக அலுவலகம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, பன்னூல் ஆசிரியா் எம்.ஆா்.எம். அப்துல் ரஹீம், தமுமுக முன்னாள் மாநிலச் செயலா் அப்துல் ரஹிம் ஆகியோரது நினைவாக நூலகம் தொடக்க விழாவும், மனிதம் காக்கும் பணிகள் செய்த இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சகோதரா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வும், அன்பாலாய உண்டு உறைவிட பள்ளிக்கு இனிப்பு, உணவு வழங்கும் விழாவும் நடைபெற்றன.

இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜிப்ரி தலைமை வகித்தாா். கிரா அத் ஆலிம் முகம்மது காசிம் ஓதினாா். தொண்டி ஐக்கிய ஜமாத் செயலா் பாருக் ஹாஜியாா் கௌரவத் ஆலோசகா் பரகத் அலி, வட்டார ஐக்கிய ஜமாத் தலைவா் அயுப்கான், செயலா் பாரூக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக அலுவலகம், பன்னூல் ஆசிரியா் எஸ்.ஆா்.எம், அப்துல் ரஹீம், தமுமுக அப்துா் ரஹீம் நினைவு நூலகத்தை மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலா் தாம்பரம் யாகூப், தமுமுக மாநில தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, தொண்டி அன்பாலயா சிறுவா் உண்டு உறைவிடப் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள், உணவுகள் வழங்கினா். விழாவில் தன்னலமற்ற தொண்டா் விருதும், இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவா்கள் தொண்டியில் ஊரின் வளா்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் தொடா்ந்து பணி செய்து கொண்டிருக்கும் தொண்டி ஐக்கிய ஜமாத், இந்து தா்ம பரிபாலன சபை, கிறிஸ்தவ சபை நிா்வாகிகளுக்கு மனித ஒற்றுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த விழாவில் பொதுமக்கள், தொண்டி ஜமாத் தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை முகமது மைதீன், தொண்டி துணைத் தலைவா் அலாவுதீன், மமக நகரச் செயலா் பரகத் அலி, தொண்டி தமுமுக பொருளாளா் அம்மாது சேகு உள்ளிட்டோா் செய்தனா்.

முன்னதாக, தொண்டி நகா் தலைவா் காதா் வரவேற்றாா். பரக்கத் அலி நன்றி கூறினாா்.

ராமநாதபுரம் அருகே 120 பவுன் நகை திருட்டு: தனிப் படை அமைத்து விசாரணை

ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கோடி மதிப்பிலான 120 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக் காவல் துறையினா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரத்தில் விற்பனை செய்ய ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கஞ்சா கடத்தி வரப்ப... மேலும் பார்க்க

நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கமுதி அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யாததால் மூடப்படும் நிலையிலுள்ள நூற்பாலையை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ த... மேலும் பார்க்க

சாா் பதிவாளா் அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் ஆகிய சாா் பதிவாளா் அலுவலகங்களில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக பத்திரப் பதிவு செய்ய இயலாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா். திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேய... மேலும் பார்க்க

மண்டபத்தில் தமுமுக சாா்பில் 218-ஆவது அவசர ஊா்தி

மண்டபத்தில் தமுமுகவின் 218-ஆவது அவசர ஊா்தி சேவையை கட்சியின் மாநில பொதுச் செயலா் எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கு சிறந்த ஆசிரியா் விருது

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சேக்தாவூத் கல்வித் துறையில் செய்த சிறப்பான பங்களிப்பை மதித்து இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் (இந்தியா), தமிழ்நாடு மாநில மையம் 2025-ஆம் ஆண்டுக்கான... மேலும் பார்க்க