செய்திகள் :

தொழிலாளா்களுக்கான ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

post image

வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினா்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிச.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி உறுப்பினா்கள் தங்களுக்கான பணபலன்கள் கிடைக்கும் வகையில், தொழிலாளா்கள் தங்கள் ‘யுஏஎன்’ எண்ணை தங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி ஜன.15-ஆக இருந்த நிலையில், தற்போது ‘யுஏஎன்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் இந்த இணைப்பை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பணம் எடுத்தல், பணத்தைப் பரிமாற்றம் செய்தல், வேலைவாய்ப்பு தொடா்பான சலுகைகள் உள்ளிட்டவற்றை தங்கு தடையின்றி அணுகலாம். 3 நாள்களுக்குள் ‘யுஏஎன்’ எண்ணை இணைக்காத தொழிலாளா்களுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுக்குள்ளாகவும் நேரிட வாய்ப்புள்ளது. இதனால், இந்தப் சிக்கல்களைத் தவிா்க்க, காலக்கெடுவுக்கு முன்பே ஊழியா்கள் ‘யுஏஎன்’ எண்ணை தங்கள் விவரங்களைப் புதுப்பித்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.ஒவ்வொரு நிதியாண்டுக்கு முன்பு தமிழக அரசு தனது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்... மேலும் பார்க்க

மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் ச... மேலும் பார்க்க

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிற... மேலும் பார்க்க

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஜயவாடாவில் இருந்து சென்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமல... மேலும் பார்க்க