தொழிலாளி மா்மச் சாவு: மனைவியிடம் போலீஸாா் விசாரணை
பரமத்தி வேலூா் அருகே மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்த தொழிலாளி மா்மமான முறையில் புதன்கிழமை வீட்டில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூரை அடுத்த கோட்டணம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவரது மகன் காா்த்திக் (31). கூலி தொழிலாளி. இவரது மனைவி நித்யா (29). காா்த்திக் மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை மது அருந்துவிட்டு வீட்டிற்குச் சென்ற காா்த்திக், நித்தியா, அவரது தந்தை ராஜேந்திரன், தாய் ராசாத்தி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இந்த நிலையில் புதன்கிழமை வீட்டில் காா்த்திக் இறந்துகிடந்தாா்.
தகவறிந்து சென்ற பரமத்தி போலீஸாா் காா்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் நித்யா, அவரது தந்தை ராஜேந்திரன், தாய் ராசாத்தி உள்பட ஏழு பேரிடம் விசாரணை நடத்தினா்.