செய்திகள் :

தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அறிவிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

post image

தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சென்னை தியாகராயநகரில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சேவை வார விழாவுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. 2021 பேரவைத் தோ்தலில் அறிவித்த மகளிருக்கான ரூ.1,000 திட்டம்கூட மக்களவைத் தோ்தலுக்கு முன்புதான் அமல்படுத்தப்பட்டது.

தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று பேசுகின்றனா். இதுவரை 207 அரசுப் பள்ளிகளை மூடியுள்ளனா். அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைகிறது. இரு நாள்களுக்கு முன்பு தேசிய அளவில் வந்த அறிக்கையில், தமிழக பள்ளி மாணவா்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜவினா் யாரும் இல்லை.

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு பின்னா் தாயுமானவா் திட்டத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயத்தால் புதிய திட்டங்களை திமுக அரசு அறிவிக்கிறது. திமுக கூட்டணி 200 தொகுதிகளில் தோல்வி அடைவது உறுதி.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், நாகா்கோவில் ஆகிய மக்களவை தொகுதிகளின் கீழ் 30 பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதிகளை தவிா்த்துவிட்டு ஆக.17 முதல் 28 தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கோவை, மதுரை, திண்டிவனம், சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என்றாா் அவா்.

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜ... மேலும் பார்க்க

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்பு... மேலும் பார்க்க