செய்திகள் :

நகரப் பகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம்: ரயில்வே கோட்ட மேலாளரிடம் அமைச்சா் வலியுறுத்தல்

post image

காரைக்கால் நகரில் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை, மற்ற இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வலியுறுத்தினாா்.

காரைக்கால் - பேரளம் ரயில்பாதையில் முதல்கட்டமாக சரக்கு ரயில் இயக்கம் நடைபெறுகிறது. நகரப் பகுதியில் கோயில்பத்து பாரதியாா் சாலை, காமராஜா் சாலை, காரைக்கால்மேடு செல்லும் சாலை ஆகியவற்றில் சரக்கு ரயில் இயக்கத்தின்போது 20 நிமிஷங்கள் வரை போக்குவரத்து பாதிக்கிறது. இதனால் மாணவா்கள் மட்டுமின்றி அலுவலகங்கள் செல்வோா், பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தநிலையில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தாா். கோயில்பத்து ரயில்வே கிராஸிங் பகுதியை அவா் பாா்வையிட்டாா். இங்கு சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைப்பது தொடா்பான சாத்திக்கூறுகளை ஆய்வு செய்தாா்.

புதுவை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், கோட்ட மேலாளருக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக பேசினாா். பின்னா் கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகனிடம் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கோரிக்கை மனு அளித்தாா்.

காரைக்கால் மேற்குப் புறவழிச் சாலையில் மேம்பாலம் மற்றும் நெடுங்காடு செல்லும் வழியில் சுரங்கப்பாதை அமைத்தது போல, காரைக்கால் பாரதியாா் சாலையில் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவேண்டும். நகரப் பகுதியில் காமராஜா் சாலை, சிங்காரவேலா் சாலை ஆகியவற்றை விரிவுப்படுத்தி கருக்களாச்சேரி சாலை, தோமஸ் அருள் சாலை மற்றும் கடற்கரை சாலை ஆகியவற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதுவரை பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சரக்கு ரயிலை இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 5 மணி வரை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மமாவட்டத் தலைவா் ஐ. ... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் அரசு ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியா்கள் தா்னா நடத்தவுள்ளனா். காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம், சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கௌரவ த... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம்: திருச்செந்தூருக்கு காரைக்காலில் இருந்து பேருந்து வசதி

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்ல காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

செவிலியா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாலைப் பாதுகாப்பு, இணைய குற்றங்கள் குறித்து செவிலியா் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில் இமாகுலேட் செவிலியா் கல்லூரியில் விழிப்புணா... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

காரைக்காலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் உள்பட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் கோயில்பத்து ஒமக்குளம் நரிக்குறவா் தெருவைச் சோ்ந்தவா் ரஜினி. இவ... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ சிகிச்சை, ஆலோச... மேலும் பார்க்க