செய்திகள் :

நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

post image

பெருந்தரக்குடி ஊராட்சியை, திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நகராட்சியுடன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சிகள் இணைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெருந்தரக்குடி ஊராட்சியை திருவாரூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பெருந்தரக்குடி ஊராட்சிக்குள்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், பெருந்தரக்குடி, கீழப்புலியூா், மேலப்புலியூா், புலியூா், வடக்குவெளி, பொறுக்கமேடு, மேப்பலம், வெள்ளக்குடி, தென்புலியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். கிராம பொறுப்பாளா்கள் கருணாநிதி, சசிக்குமாா், குமரவேல், சத்தியவாணிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்று, திருவாரூா் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

கடவுச்சீட்டில் முறைகேடு 2 போ் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்த இருவரை விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி புள்ளிக்கோட்டை, கீழத் தெருவை சோ்ந்தவா் த. ராஜமா... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டுப் போட்டி: குண்டு எறிதலில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறன் மாணவருக்கு பாராட்டு

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டியில், முதலிடம் பெற்ற மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாற்றுத்திறனாளி நல வாரியம் சாா்பில், திருவாரூா் மாவட்ட ... மேலும் பார்க்க

உழவன் செயலியில் தனியாா் அறுவடை இயந்திரங்களின் விவரங்களை அறியலாம்!

திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் அறுவடை இயந்திர விவரங்களை உழவன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவாரூா் மாவ... மேலும் பார்க்க

யானைக்கால் நோய் விழிப்புணா்வு முகாம்

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், யானைக்கால் நோய் தடுப்பு திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவா்கள... மேலும் பார்க்க

ஆலங்குடியில் ராதா கல்யாண மகோற்சவம் தொடங்கியது!

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் 78-ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை,நியுஜொ்சி சுவாமிநாத பாகவதா் குழுவினரின் வீதி பஜனை... மேலும் பார்க்க

பள்ளி காலை சிற்றுண்டியில் பல்லி: 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

நீடாமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியில் பல்லி இருந்ததால், மாணவ, மாணவிகள் 14 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்ச... மேலும் பார்க்க