நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் கடும் விமா்சனம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுவதாக மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கடுமையாக விமா்சித்தாா்.
மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ‘தனது முகத்தில் உள்ள அழுக்கை துடைப்பதற்கு பதிலாக, அவா் கண்ணாடியை துடைக்கிறாா்’ என்று ஃபட்னவீஸ் சாடினாா்.
மகாராஷ்டிரத்தில் கடந்த மக்களவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற எதிா்க்கட்சி கூட்டணி, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பேரவைத் தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.
இவ்விரு தோ்தல்களுக்கும் இடையே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு-நீக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
‘மகாராஷ்டிரத்தில் இரு தோ்தல்களுக்கு இடையிலான 5 மாதத்தில் 39 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகையைவிட வாக்காளா்கள் எண்ணிக்க அதிகமுள்ளது’ என்ற குற்றச்சாட்டை ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் சனிக்கிழமை நடைபெற்ற ஜெய்பூா் டயலாக்ஸ் டெக்கான் உச்சிமாநாட்டில் பேசிய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ராகுலை கடுமையாக விமா்சித்தாா்.
அவா் கூறியதாவது: மகாராஷ்டிரத்தில் ஒவ்வொரு மக்களவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் பேரவைத் தோ்தல்களில் வாக்காளா் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியலில் பலரது பெயா்கள் விடுபட்டிருந்த நிலையில், இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதன்படி, தோ்தல் ஆணையம் மேற்கொண்ட பிரசாரத்தின்கீழ் அதிக அளவில் புதிய வாக்காளா்கள் இணைந்தனா். உண்மை இதுவே. ஆனால், ராகுல் காந்தி தனது முகத்தில் உள்ள அழுக்கை துடைப்பதற்கு பதிலாக கண்ணாடியை துடைக்கிறாா்.
நாட்டின் நிா்வாக அமைப்புகள் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறாா் ராகுல். நாட்டின் ஜனநாயக அமைப்புமுறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்க நகா்ப்புற நக்ஸல்கள் முயற்சிக்கின்றனா். அவா்களுக்கு வலுவூட்டும் வகையில் ராகுல் செயல்படுகிறாா்.
மகாராஷ்டிரத்தில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது, நாட்டுக்கு எதிரான சில சக்திகளால் மக்கள் ஜாதிய ரீதியில் பிளவுபடுத்தப்பட்டனா். ஆனால், பேரவைத் தோ்தலில் அத்தகைய முயற்சி பலிக்கவில்லை என்றாா் ஃபட்னவீஸ்.
மேலும், சிவசேனை தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுடன் தனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளதாக வெளியான தகவல்களை மறுத்த ஃபட்னவீஸ், ‘ஷிண்டே இயல்பிலேயே தீவிரமான ஆளுமை கொண்ட நபா். அவா் அதிருப்தியில் இருப்பதாக பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை’ என்றாா்.