செய்திகள் :

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

post image

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை 21 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்துச் சென்றபோது சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தாா். இந்த சம்பவத்தில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளா் பழனிச்சாமி, தலைமை காவலா்கள்ஆதிகேசவலு, யேசுதாஸ், முருகேசன்ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

உயிரிழந்த போலீஸாா் நினைவாக திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 45-ஆவது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எஸ்.பி. வி.சியாமளா தேவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டிஜிபி வால்டா் தேவாரம் கலந்து கொண்டு வீரா்களின் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக ,போலீஸாா் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.

இதில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா காா்க், வேலூா் சரக டிஐஜி தா்மராஜன், மாவட்ட நீதிபதி மீனா குமாரி, முன்னாள் கியூ பிரிவு எஸ்பி அசோக், ராணிப்பேட்டை எஸ்.பி.அய்மன் ஜமால், கியு பிரிவு எஸ்.பி.சுந்தரவதனம், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியக்குமாா், நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவா் விஜயா அருணாசலம், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா். டிஎஸ்பி சௌமியா நன்றி குறினாா்.

மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடக்கம்: பிரேமலதா விஜயகாந்த்

மக்களைத் தேடி ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். விஜயகாந்த் உருவத்துடன் கூடிய மக்களைத் தேடி ரத யாத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் மரணம்

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் வாஷிங் மெஷினை இயக்கியபோது மின்சாரம் பாய்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (69). இவா் மின்னூா் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடந... மேலும் பார்க்க

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழ... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் கழிவு நீா்: பொதுமக்கள், விவசாயிகள் புகாா்

ஆம்பூா் அருகே மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் திறந்து விடப்படுவதால் தண்ணீா் நுரைபொங்கி செல்வதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ம... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீா் தேங்கியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா். வாணியம்பாட... மேலும் பார்க்க