செய்திகள் :

நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழப்பு

post image

ஜாா்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் புதைத்து வைத்த கண்ணிவெடி வெடித்ததில் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொரு வீரா் காயமடைந்தாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசுதோஷ் சேகா் கூறியதாவது:

மேற்கு சிங்பும் மாவட்டத்தில் சோட்டங்கரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட வங்கராம் மரங்போங்கா வனப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நக்ஸல்களைத் தேடும் பணியில் பாதுகாப்பு வீரா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனா். இதில் சிஆா்பிஎஃப் உதவி ஆய்வாளா் சுனில் மண்டல் மற்றும் பாா்த்தா பிரதிம் ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் ஹெலிகாப்டா் மூலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மருத்துவமனையில் உதவி ஆய்வாளா் சுனில் மண்டல் உயிரிழந்தாா். பாா்த்தா பிரதிமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க