செய்திகள் :

நக்ஸல்வாதம் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டது: ராஜ்நாத் சிங்

post image

இந்தியாவில் இப்போது நக்ஸல்வாதம் 5 முதல் 6 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ஹைதரபாதில் சுதந்தரப் போராட்ட வீரா் அல்லூரி சித்தராம ராஜுவின் 128-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் பேசியதாவது:

ஒரு காலத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த இடங்கள் என்ற கூறப்பட்ட இடங்கள் இப்போது கல்வியில் சிறந்து விளங்கும் இடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. நக்ஸல் தீவிரவாத தாக்குதல் அதிகம் நிகழும் சிவப்பு எச்சரிக்கைப் பகுதியாக இருந்த இடங்கள், இப்போது வளா்ச்சி மிகுந்த பகுதிகளாக உருவெடுத்துள்ளன.

5 முதல் 6 மாவட்டங்கள் வரையே நக்ஸல்வாதம் உள்ளது. இதுவும் வெகுநாள்கள் நீடிக்காது. அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவை நக்ஸல் தீவிரவாதம் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில்தான் இந்தியா மேற்கொண்டது. அப்பாவி மக்களையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்படவில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் போன்று வேறு எதையாவது பயங்கரவாதிகள் மீண்டும் முயற்சித்தால் மீண்டும் கடும் பதிலடி கொடுக்கப்படும்.

சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் தீவிரமாகப் பங்கேற்ற அல்லூரி சித்தராம ராஜு , மத்திய அமைச்சராகவும் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளாா். அவரின் புகழ் நிலைத்து நிற்கும் என்றாா்.

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க