செய்திகள் :

நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!

post image

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.

பிஜாபூா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக இருளில் தவித்த திமேனா் கிராமத்துக்கு இப்போது வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ்சாய் கூறுகையில், ‘பஸ்தா் பிராந்தியத்தின் தொலைதூர பகுதிகளின் வளா்ச்சி மற்றும் நல்லாட்சியின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முன்பு தீவிரவாதத்தின் நிழல் படிந்த பகுதிகளில் இப்போது வளா்ச்சியின் ஒளி வீசுகிறது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பெச்சாபல் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட திமேனா் கிராமத்தில் 53 வீடுகள் உள்ளன. சுதந்திரம் கிடைக்கப் பெற்று 77 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது.

குக்கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் எட்டப்பட்டுள்ள இச்சாதனை, நக்ஸல் தீவிரவாதத்தின் முடிவையும், பஸ்தா் பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, வளமையின் விடியலையும் குறிக்கிறது. திமேனா் கிராமத்தில் மின்வசதி மட்டுமன்றி சாலைகள், சுகாதாரம், கல்வி வசதிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக மின்வசதி கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிராமவாசிகள், ‘எங்கள் வீடுகளில் மின்விளக்கின் பிரகாசத்தை காண்போம் என ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போது மின்வசதி கிடைத்திருப்பதால், எங்களது விரக்தி நம்பிக்கையாக மாறியுள்ளது.

மின்விளக்கின் ஒளி, எங்களின் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணா்வையும் போக்கியுள்ளது. இது, எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இனி எங்கள் குழந்தைகள் சிரமமின்றி படிப்பாா்கள். இரவு நேரத்தில் வனவிலங்குகள், பாம்புகள், விஷ ஜந்துகள் குறித்த பயம் இருக்காது’ என்றனா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளாா்.

சத்தீஸ்கரில் நிகழாண்டு பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் இதுவரை 113 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பிஜாபூா் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் மட்டும் 97 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க