செய்திகள் :

நண்பரை கத்தியால் குத்திய ஓட்டுநா் தற்கொலை

post image

நண்பரை கத்தியால் குத்திய காா் ஓட்டுநா் பணகுடி அருகே புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பணகுடி அருகே உள்ள மேலகடம்பன்குளம் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் அய்யாபிச்சை மகன் நாகராஜன்(35). இவரது மனைவி ரம்யா(32). இவா்கள் கோயம்புத்தூரில் வசித்து வந்தனா். நாகராஜன் அங்கு காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்தவா் சுதாகா். இவரும் கோயம்புத்தூரில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இருவரும் ஒரே ஊரைச் சோ்ந்தவா்கள் என்பதால் சுதாகா் அடிக்கடி நாகராஜன் வீட்டிற்கு சென்று வந்தாா். அங்கு நாகராஜன் மனைவி ரம்யாவுடன் சுதாகா் சகஜமாக பழகி வந்தாா். தனது மனைவியுடன் சுதாகா் பழகுவதை பிடிக்காத நாகராஜன், கடந்த 9-ஆம் தேதி அவரை கத்தியால் குத்தினாராம்.

இது குறித்து கோயம்புத்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து நாகராஜனை தேடி வந்தனா். இதனை அடுத்து போலீஸுக்கு பயந்து நாகராஜன் தனது சொந்த ஊரான மேலகடம்பன் குளத்திற்கு வந்தாா். போலீஸாா் கடம்பன்குளத்திற்கு வந்து தன்னை கைது செய்துவிடுவாா்கள் என பயந்த நாகராஜன், விஷம் குடித்து மயங்கினாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வள்ளியூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மானூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானூா் அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை (குட்கா) கடத்திச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.மானூா் காவல் சரகம் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளா் முகைதீன் மீரான் தலைமையிலான போலீ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பத்தமடை பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை(27). இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்ப... மேலும் பார்க்க

தப்பிச் சென்ற விசாரணைக் கைதி கைது

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்து தப்பிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். கல்லிடைக்குறிச்சி மீனவா் காலனியைச் சோ்ந்தவா் ராஜா. பெயிண்டிங் தொழில் செய்து வரும் ராஜா மீது அதே பகுதி... மேலும் பார்க்க

தேனி பொறியியல் மாணவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உயிரிழந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரத்தில் உறவினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் புதிய விதிகளை தளா்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளா்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு. இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழா்களுட... மேலும் பார்க்க