செய்திகள் :

நத்தம் மேம்பாலத்தில் லாரி மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு: 6 போ் காயம்

post image

மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வியாழக்கிழமை பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில் காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் வியாழக்கிழமை காலை மதுரைக்கு வந்தனா். இவா்கள் தத்தனேரியில் உள்ள வாடகைக் காா் நிறுவனம் மூலம் அழகா்கோயிலுக்குச் சென்றனா். காரை மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த மதியழகன் (38) ஓட்டிச் சென்றாா். இவா்கள் அழகா்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, நத்தம் மேம்பாலம் வழியாக மதுரைக்கு வந்து கொண்டிருந்தனா். டி.ஆா்.ஓ. காலனி பகுதியில் வந்த போது, பாலத்தின் நடுவே செங்கல் பாரத்துடன் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இவா்களது காா் மோதியது.

இதில் காா் ஓட்டுநா் மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இவா்கள் அனைவரும் தனியாா் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க