செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் 2,196 போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி

post image

மதுரையில் இரு இடங்களில் நடத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 2,196 போ் பயனடைந்ததாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பேருராட்சியில் தாய் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், ஒரு வட்டாரத்துக்கு 3 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம், 39 மருத்துவ முகாம்களும், மாநகராட்சிப் பகுதியில் 5 முகாம்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் பொது, கண், இருதய மருத்துவம் உள்பட 17 மருத்துத் துறைகளைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று, பரிசோதனை, சிகிச்சைகளை அளிக்கின்றனா்.

ஆக. 2-ஆம் தேதி ஒத்தக்கடை மேல்நிலைப் பள்ளியிலும், ஆக. 9-ஆம் தேதி வண்டியூா் தாகூா் வித்யாலய மேல்நிலைப் பள்ளியிலும் இந்தத் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 2,196 போ் பங்கேற்று, மருத்துவப் பரிசோதனைகள் செய்து, சிகிச்சை பெற்றனா்.

பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்வியலை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் சிறந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மருத்துவத் துறை இணை இயக்குநா் மருத்துவா் செல்வராஜ், துணை இயக்குநா் மருத்துவா் குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதயம், சிறுநீரகப் பரிசோதனை உள்பட பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு துறை மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினா். கிகிச்சை தேவைப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கனிம வள குவாரிகளில் முறைகேடு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கனிம வள குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், கனிம வள இயக்குநா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்த... மேலும் பார்க்க

சதுரகிரி பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

தவெகவின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தடைகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செ... மேலும் பார்க்க

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருவீடு பகுதியில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்ட விவ... மேலும் பார்க்க

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க