செய்திகள் :

நல்லாட்சிக்கான முன்மாதிரி பாஜக: பிரதமர் மோடி

post image

நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் ஆட்சிக்கான முன்மாதிரியாக பாஜக உருவாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

''பாஜக மாநில அலுவலகத்தை திறக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், பொது சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் தொழிலாளர்களின் உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கண்டு என் இதயம் பெருமையால் நிறைந்துள்ளது.

பாஜக எப்போதும் தில்லியுடனும் அதன் நலன்களுடனும் இணைந்திருக்கிறது. இன்று, கட்சியின் புதிய மாநில அலுவலகத்திற்குள் நுழைகையில், அமைப்பின் சேவைப் பணிகளில் தொடர்ந்து உத்வேகம் பெற வேண்டும். மேலும் பொது நலனுக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நல்ல ஆட்சி வழங்குவதற்கான புதிய மாதிரியை பாஜக உருவாக்கியுள்ளது. மரபு மற்றும் மேம்பாடு என்ற மந்திரத்தைக் கொண்டு முன்னேறி வருகிறோம். நாட்டிற்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். பெரும் மோசடிகளில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம். உற்பத்தியை பெருக்கி சாமானிய மக்களின் வருவாயை உயர்த்துவதே அரசின் நோக்கமாக உள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அரசின் மீது தில்லி மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பாஜகவுக்கு உள்ளது. இந்தப் புதிய அலுவலகத்தில் இருந்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தில்லி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய தில்லி அரசு நிர்வாகத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

தில்லியில் சேரிகளில் வசிப்போருக்கு குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தில்லியில் நூற்றுக்கும் அதிகமான மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. யமுனா நதியை சுத்தம் செய்ய இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் நதியை சுற்றியுள்ள மக்களுக்கு தூய்மையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த முடியும்.

தில்லி அரசும் பாஜக அலுவலகமும் தோளுக்கு தோளாக பணியாற்றினால் வளர்ந்த இந்தியா மற்றும் மேம்படுத்தப்பட்ட தில்லி என்ற இலக்கை விரைவில் அடைய முடியும்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

BJP-led NDA govts have given new model of governance PM Modi

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடாவின் பயங்கரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்ப... மேலும் பார்க்க

தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பாஜக தில்லி பிரிவின் புதிய அலுவலகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்... மேலும் பார்க்க

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26% அதிகரிப்பு!

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தி லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு, 1990-லிருந்து 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1990-ல் ஒரு லட்சம் பேரில் 84.8 பேருக்கு ... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதையட... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையின் இந்தியப் பதிப்புக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளதாகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்த பாஜக!

கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை அமைத்துள்ளதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க