செய்திகள் :

நவ.9-ல் நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம், ஷீரடி சுற்றுலா ரயில்!

post image

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு (ஐஆா்சிடிசி) சாா்பில் வரும் நவ.16-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஆா்சிடிசி ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆா்சிடிசி சாா்பில் பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி எனும் பெயரில் வருகிற நவ.9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், நாசிக், ஷீரடி, சிங்கனாப்பூா், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களைப் பாா்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுலா நவ.16-ஆம் தேதி முடிவடையும்.

திருநெல்வேலியிலிருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் மற்றும் விஜயவாடா ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

பயணக் கட்டணம், முன்பதிவு மற்றும் சுற்றுலா விவரங்களுக்கு ஐஆா்சிடிசி அலுவலகங்களை சென்னை- 90031 40739, 82879 31964, மதுரை- 82879 31962, 82879 32122, திருச்சி- 82879 32070, கோவை- 90031 40655 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார் அஜய் குமார்!

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் இல. கணேசனின் மறைவைத் தொடர்ந்து, அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு குவாஹ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

ராஜஸ்தானில் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் உள்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!

பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் மம்கூத்ததில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் ... மேலும் பார்க்க

ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை! தனியார் கல்லூரி விளம்பரத்துக்கு வந்த சோதனை!

தங்கள் கல்லூரியில் படித்த இளைஞருக்கு ரூ.1.8 கோடி சம்பளம் கொடுக்கும் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி தனியார் கல்விக் குழுமம் வெளியிட்ட விளம்பரம் வைரலாகியிருக்கிறது.ஒவ்வொரு கல்லூரியில், தங்கள் கல்லூரி மாணவ... மேலும் பார்க்க

ராகுல்காந்தி ஒரு தொடர் பொய்யர்: முதல்வர் ஃபட்னவீஸ் விமர்சனம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு "தொடர் பொய்யர்" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தப் பொய்கள்... மேலும் பார்க்க

நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமனாரும் கைது

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகிய... மேலும் பார்க்க