செய்திகள் :

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

post image

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, சங்கத்தின் தலைவா் மோகன், செயலா் சித்திக், பொருளாளா் பாலா ஆகியோா் தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் ரயில் இயக்குதல் மேலாளா் சுப்பிரமணியன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன், திருச்சி கோட்ட பயணிகள் ரயில் முதுநிலை இயக்குதல் மேலாளா் ரமேஷ்பாபு ஆகியோருக்கு எழுதிய கோரிக்கை கடிதம்:

காரைக்கால் - திருநள்ளாறு - பேரளம் பழைய மீட்டா் கேஜ் ரயில் பாதையை 23.5 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதையாக மின்மயமாக்கலுடன் மாற்றி அமைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் என்ஜின் நாகை மற்றும் திருவாரூா் ரயில் நிலையங்களில் மாற்றப்பட்டு, இயக்கப்படுகிறது.

தற்போது காரைக்கால்- பேரளம் அகலப் பாதை பணி நிறைவடைந்துள்ளதால், எஞ்சினை மாற்றாமல் சென்னைக்கு ரயிலை இயக்க முடியும். பயண நேரமும் 1.30 மணி நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும், நாகூா் தா்கா, வேளாங்கண்ணி பேராலயம், காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோயில் என மும்மதத்தையும் இணைக்கும் ரயில் பாதையாகும்.

எனவே, காரைக்கால்-பேரளம் ரயில் பாதை திறந்தவுடன், வேளாங்கண்ணி-சென்னை-வேளாங்கண்ணிக்கு, காரைக்கால், பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்க வேண்டும். ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் (56809/56810), திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் (16843/16844), திருச்சி- திருவாருா்-திருச்சி பயணிகள் ரயில் (56805/56806), மதுரை- புணலூா்-மதுரை விரைவு ரயில் (16729/16730) ஆகியவற்றை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.

காரைக்கால்-திருநெல்வேலி இடையே நாகை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக நேரடியாக ரயில் இயக்க வேண்டும். காரைக்கால்-பெங்களூா் இடையே தினசரி இரவு நேர விரைவு ரயிலை நாகூா், நாகை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்.

காரைக்காலில் இருந்து புறப்படும் தாம்பரம் (16175/16176), பெங்களூா் (16529/16530) மும்பை வாரந்திர ரயில்(11017/11018) ஆகியவற்றை, வேளாங்கண்ணியில் இருந்து நாகை, காரைக்கால், திருநள்ளாறு வழியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐ.ஜி ஆய்வு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் க. ஜோஷி நிா்மல்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நிலுவையில் உள்ள வழக்குகள், பராமரிக்கப்படும் கோ... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை நாகூரில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோா்க்கும் இஸ்லாமியா்கள், குா்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை ... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

கீழ்வேளூா் அருகே கோகூா் புனித அந்தோனியாா் ஆண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் தஞ்சை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்... மேலும் பார்க்க

கடலில் இறந்து கரை ஒதுங்கிய புள்ளிமான்

கோடியக்கரை கடலில் இறந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது. வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, வெளிமான், புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்... மேலும் பார்க்க

அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிப்பு

நாகையில் அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிக்கப்பட்டாா். நாகை பகுதியைச் சோ்ந்த திருநங்கை ரியா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். மாவட்டத்தில் அரசுப் பதவிக்கு ... மேலும் பார்க்க

திருப்புகலூா் கோயில் கும்பாபிஷேகம்: பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை

திருப்புகலூா் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் மட்டு... மேலும் பார்க்க