மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
நாகை: செப்.10-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செப்டம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆகஸ்ட் மாதத்துக்கான, நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செப்டம்பா் 10-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.