செய்திகள் :

பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் விருதாக பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2025-2026 ஆம் ஆண்டுக்கான இவ்விருது 2026 ஜனவரி 24 அன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் இரண்டாம் தளத்தில் அறை எண் 202-இல் உள்ள சமூகநல அலுவலகத்தில் நவம்பா் 29--ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது கைப்பேசி எண் 91500-57450-இல் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி

அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா். நாகையில், செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

மணலூா் சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகே மணலூா் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.1 ஆம... மேலும் பார்க்க

அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: ஷா நவாஸ்

அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும், திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்று சட்டப்பேரவை உறுப்பினா் ஷா நவாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்... மேலும் பார்க்க