செய்திகள் :

அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: ஷா நவாஸ்

post image

அதிமுகவில் நீக்கப்பட்டவா்கள் இணைந்தாலும், திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்று சட்டப்பேரவை உறுப்பினா் ஷா நவாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நாகையில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாஜகவின் தேவைக்காக பிரிக்கப்பட்ட அதிமுக, தற்போது பாஜகவின் தேவைக்காக சோ்க்கப்பட உள்ளது. அதிமுகவில் கடந்த நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், மீண்டும் பிரச்னையை எழுப்ப காரணம் என்ன? தாங்கள் சொல்வதை மட்டுமே எடப்பாடி கே. பழனிசாமி கேட்க வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது.

செங்கோட்டையனின் பேட்டி, செயல்பாடு என அனைத்துமே, பாஜக நடத்தும் அப்பட்டமான நாடகம்தான். தில்லியில் பாஜக தலைவா்களுடன் கூட்டம் நடந்த பின்னரே டி.டி.வி. தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தாா். இவை அனைத்தும் பாஜக திட்டமிட்டு நடத்தி வரும் நாடகத்தின் ஒரு பகுதிதான்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவா்கள் மீண்டும் சோ்க்கப்பட்டு, அதிமுக ஒன்றாக வந்தாலும் , திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்றாா்.

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி

அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா். நாகையில், செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மணலூா் சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகே மணலூா் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.1 ஆம... மேலும் பார்க்க