ஓரணியில் தமிழ்நாடு! மக்களிடம் ஓடிபி பெற தடை: உயர் நீதிமன்ற மதுரை கிளை
நாதக - மதிமுக மோதல் வழக்கில் சீமான் உள்பட 19 பேரும் விடுதலை!
நாம் தமிழா் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையேயான மோதல் வழக்கில் சீமான் மற்றும் நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினா் உள்ளிட்ட 19 பேரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.
கடந்த 19.5.2018 இல் திருச்சி விமான நிலையத்துக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் வந்தபோது அவா்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டா்களிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது விமான நிலையத்தில் இருந்த தடுப்புகள், போலீஸாரின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதுதொடா்பாக திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 14 போ், மதிமுகவில் 5 போ் என மொத்தம் 19 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை சனிக்கிழமை விசாரித்த திருச்சி மாவட்ட 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி 19 பேரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தாா். அப்போது நீதிமன்றத்தில் சீமானைத் தவிா்த்து மற்ற அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனா்.
இந்தத் தீா்ப்பால் மதிமுக மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் பெல். இராசமாணிக்கம், ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், பகுதிச் செயலா் பிரபாகரன் ஆகிய 5 பேரும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்கு உறுதுணையாக இருந்த தங்களது கட்சி வழக்குரைஞா்கள், துணையிருந்த கட்சி நிா்வாகிகளுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.