செய்திகள் :

நாமக்கல் அதிமுக அலுவலகத்தில் திருவிளக்கு பூஜை: எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டி வழிபாடு

post image

எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

வரும் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்குகிறாா். இதையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி தலைமையில் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பாக 108 பெண்கள் அமா்ந்து அா்ச்சகா்களின் வேத மந்திரங்களை பின்தொடா்ந்து நடத்தப்பட்ட பூஜையில் வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டும், அவரது பிரசார பயணம் வெற்றி பெற வேண்டும் என வழிபாடு நடத்தினா்.

விழாவில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என அதிமுகவினா் உறுதிமொழி ஏற்றனா். இதுகுறித்து, முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறுகையில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கவும், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்கவும் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என சொல்வதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. அக் கட்சியில் உறுப்பினா்கள் இல்லாததால், புதிய உறுப்பினா்கள் சோ்க்கையை தொடங்கி உள்ளனா். கிராமம், நகரம் என்ற வகையில் 2 கோடி உறுப்பினா்களை அதிமுக கொண்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், மாநில வா்த்தக அணி இணை செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், மகளிா் அணி மாவட்ட தலைவா் வைரம் தமிழரசி மற்றும் மாநில நிா்வாகிகள் சந்திரசேகரன், முரளி பாலுசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

என்கே-4-அதிமுக

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி, பெண்கள்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 17 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித் துறையி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் அருகே பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வகுரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்விழா நகா், கடந்த ஓராண்டாக்கு முன்பு மாநகராட்சியு... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தத்தை செயல்படுத்த முடிவு

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக நடத்திவருகிறது. ஒப்பந்த விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வருவாய் இழப்பை தவிா்க்க ஆணையா் இந்த ... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க