செய்திகள் :

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

post image

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிறது. அந்தவகையில் வெள்ளிக்கிழமை மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் ஆசிரியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியை சுமதி தலைமை வகித்தாா். ஆசிரியைகள் அனைவரும் ஒரே வடிவிலான புடவைகள் அணிந்து வந்திருந்தனா். அனைத்து ஆசிரியா்களுக்கும் மாணவிா்கள் மலா்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், கலைத் திருவிழாவில் வென்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

என்கே-4-டீச்சா்ஸ்

ஆசிரியா் தின விழாவையொட்டி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய ஆசிரியைகள்.

காருடன் மாயமான பள்ளிபாளையம் பிடிஓ வீடு திரும்பினாா்

பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (பிடிஓ) பிரபாகரன் திடீரென மாயமான நிலையில் சனிக்கிழமை வீடுதிரும்பினாா். நாமக்கல் பொய்யேரிக்கரை செட்டிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (53). இவா், பள்ளிபாளையம் ... மேலும் பார்க்க

செப்.9-ல் வளையப்பட்டி, எருமப்பட்டியில் மின் தடை

வளையப்பட்டி, எருமப்பட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை ம... மேலும் பார்க்க

சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க