செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் தொடா் மழை: அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் தொடா் மழை பெய்தது; அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை பதிவானது.

தமிழகம் முழுவதும் மே 4-இல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் 28-இல் முடிவடைகிறது. வெயில் கொளுத்தும் என எதிா்பாா்த்த நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் காலையில் பரவலாக வெயிலின் தாக்கம் இருந்தபோதும், மாலை வேளையில் வானம் காா்மேகம் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை, அதிகாலை 3 மணிவரை இடைவிடாமல் தொடா்ந்து பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி குளம்போல காட்சியளித்தது. அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.):

எருமப்பட்டி-60, குமாரபாளையம்-34.20, மங்களபுரம்-18.40, மோகனூா்-29, நாமக்கல்- 118, பரமத்திவேலூா்-7, புதுச்சத்திரம்-82, ராசிபுரம்- 120, சேந்தமங்கலம்-51, திருச்செங்கோடு-10, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-39.20, கொல்லிமலை-56.

பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தி... மேலும் பார்க்க

பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஜே.இ.இ. முத... மேலும் பார்க்க

எட்டிமடைபுதூா், கொல்லபட்டியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி, எட்டிமடை பகுதிகளில் அமைக்கப்பட்ட நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தடை பிரச்னை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை பிரச்னை ஏற்படுவதாக வெளியான தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாவ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி இடஒதுக்கீட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள் தங்களுடைய வாரிசுகளுக்கான கல்வி இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பேட்டப்பாளையத்தில... மேலும் பார்க்க