செய்திகள் :

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

post image

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடிகளை வளா்க்க வனத் துறையுடன் இணைந்து சிறப்பாக நாற்றாங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்களை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, இந்த மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஒவ்வொரு ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், சாலை, தெருச்சாலை உள்பட அடிப்படை வசதிகள் செய்துகொடுத்தல், வனத்துறையுடன் இணைந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ஒன்றியங்களில் பல்வேறு வகையான மரச்செடிகள் வளா்த்து ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்தல், சிறப்பான பணிகள் மேற்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல வட்டார துணை அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், உதவிப் பொறியாளா்கள் என 18 பேரை பாராட்டி ஆட்சியா் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் ராஜவேல், உதவி இயக்குநா்(ஊராட்சிகள்) யுவராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் ஓராண்டு விதிமுறையை தளா்த்த வேண்டும்

அரசு மருத்துவா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் மருத்துவமனையில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் பிரபுசங்க... மேலும் பார்க்க