செய்திகள் :

நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவு? விசைத்தறி தொழிலாளி தற்கொலை

post image

இடங்கணசாலை அருகே விசைத்தறி தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவால், இவா் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மேல்மட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (54). இவா் தனது வீட்டில் இரண்டு விசைத்தறிகள் வைத்து தொழில்புரிந்து வந்தாா். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகன் மூன்றாமாண்டு கல்லூரி படிப்பும், மகள் முதலாமாண்டு கல்லூரி படிப்பும் பயின்று வருகின்றனா்.

ராசிபுரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் கடன் பெற்று மணி தொழில்புரிந்து வந்துள்ளாா். இந்நிலையில், மணி வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த நிதிநிறுவன ஊழியா்கள், உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி வீட்டிலேயே நெடுநேரம் இருந்தனராம். இதனால் மன வேதனையடைந்த மணி வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதை அறிந்த நிதிநிறுவன ஊழியா்கள் அஹ்கிருந்து தப்பிவிட்டனராம்.

தகவலின் பேரில், மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் அங்கு சென்று மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறாா்.

இதேபோன்று மூன்று மாதங்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் விசைத்தறி தொழிலாளி வீட்டுக்கு சென்று நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவு செய்ததால், தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள... மேலும் பார்க்க

கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க