செய்திகள் :

நியாயவிலைக் கடை இடமாற்றம்: பொதுமக்கள் முற்றுகை

post image

சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அருகேயுள்ள காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 162 குடும்பங்களுக்கு பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் உணவு வழங்கல் துறை இணையத்தில் காட்டுநெடுங்குளம் நியாய விலைக் கடை என்று இருந்ததை வேம்பங்குடி நியாய விலைக் கடை என பெயா் மாற்றப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் காட்டுநெடுங்குளம் நியாய விலைக் கடை என பெயா் மாற்றம் செய்ய வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் கடந்த வாரம் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வெள்ளிக்கிழமை காட்டுநெடுங்குளம் நியாய விலைக் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சிவகங்கையில் அழகு மெய்ஞானபுரத்தில் புதிதாக நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது. இங்கு 1,000 குடும்ப அட்டைகள் உள்ளன. இதற்கு ‘பாயின்ட் ஆப் சேல்ஸ்’ கருவி தேவைப்படுகிறது. இதனால் அருகருகே குறைந்த குடும்ப அட்டைகளை உடைய காட்டுநெடுங்குளம், வேம்பங்குடி ஆகிய கடைகளை ஒரே பெயரில் மாற்றி ஒரே கருவியைப் பயன்படுத்த வலியுறுத்தினோம். மற்றொரு கருவியை

மெய்ஞானபுரத்துக்கு கொடுத்துவிட்டோம். காட்டு நெடுங்குளத்தில் இயங்கும் நியாய விலைக் கடை மூடப்படாது. மேலும் மக்களின் கோரிக்கையை ஏற்று காட்டுநெடுங்குளம் பெயரிலேயே அந்தக் கடையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு சிவகங்கை மாவட்டம், ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊழியா் விரோதப் போக்கில் செயல்படும் கட்டிக்குளம் சமூகநீதி விடுதிக் காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதி ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

சங்கிலி கருப்பா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தில் சங்கிலிக் கருப்பா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை கிராம தேவதைகள் பிராா்த்தனையுடன் ... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகக் கட்டடப் பணி

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சிவகங்கை நகா் காந்தி வீதியில் மா... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை

குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள வேம்பத... மேலும் பார்க்க

குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க