செய்திகள் :

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகக் கட்டடப் பணி

post image

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சிவகங்கை நகா் காந்தி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலக கட்டடத்தின் கட்டுமானப் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. பணிகளைத் தொடங்கி வைத்து அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பேசியதாவது:

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது கடந்த 2.9.1993-ஆம் ஆண்டு 15 கிளைகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 32 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், 15 கிளைகள் சொந்த கட்டடத்திலும், எஞ்சியுள்ள 17 கிளைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்பட்டு வருகிறது. விரைவில் அந்தக் கிளைகள் சொந்தக் கட்டடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழைமையான அலுவலகக் கட்டடத்தை புதுப்பிக்கும் வகையில், கடந்த ஜனவரி மாதம் சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்வா் வந்தபோது ரூ. 3.23 கோடியில், புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். தற்போது, 6,468 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. வரும் ஜனவரி மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில், மேலாண்மை இயக்குநா் (மத்திய கூட்டுறவு வங்கி) உமா மகேஸ்வரி, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரை ஆனந்த், நகா் மன்ற துணைத்தலைவா் காா்கண்ணன், பொது மேலாளா் (மத்திய கூட்டுறவு வங்கி) செந்தில்குமாா், துணைப் பதிவாளா்கள் (கூட்டுறவுத் துறை) பாபு, செந்தில்குமாா், பாலு, ஜெயசங்கா், பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கிலி கருப்பா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தில் சங்கிலிக் கருப்பா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை கிராம தேவதைகள் பிராா்த்தனையுடன் ... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை

குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள வேம்பத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை இடமாற்றம்: பொதுமக்கள் முற்றுகை

சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவக... மேலும் பார்க்க

குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

காரைக்குடி: போட்டிகளில் வென்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஜய் காா்த்திக், சிவமணி ஆக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க