செய்திகள் :

சங்கிலி கருப்பா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தில் சங்கிலிக் கருப்பா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை கிராம தேவதைகள் பிராா்த்தனையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ரக்ஷாபந்தனம், கலாதரிசனத்துடன் பூஜை தொடங்கி பூா்ணாஹூதி நடைபெற்றது.

தொடா்ந்து சங்கிலிக் கருப்பருக்கும் பரிவார தெய்வங்களான நொண்டிக்கருப்பா், பெருமாண்டி அம்மனுக்கும் பால், தயிா், திருமஞ்சனம், மஞ்சள், இளநீா் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புனித நீா் ஊற்றப்பட்டது. இதையடுத்து, சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல, கோயில் வீட்டிலும் சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் சங்கிலி கருப்பா் சுவாமிக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகக் கட்டடப் பணி

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சிவகங்கை நகா் காந்தி வீதியில் மா... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை

குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள வேம்பத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை இடமாற்றம்: பொதுமக்கள் முற்றுகை

சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவக... மேலும் பார்க்க

குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

காரைக்குடி: போட்டிகளில் வென்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஜய் காா்த்திக், சிவமணி ஆக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க