செய்திகள் :

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்

post image

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அனைத்து தரப்பினரின் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக மானாமதுரையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் முனியராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றியச் செயலா் சங்கையா, பாஜக முன்னாள் ஒன்றியத் தலைவா் ரவி, காங்கிரஸ் நகரத் தலைவா் பி. புருஷோத்தமன், அதிமுக முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.சி.மாரிமுத்து, முன்னாள் பேரூராட்சித் தலைவா் தீனதயாளன், தேவேந்திர முன்னேற்ற சங்க நிறுவனா் சிவசங்கரி, ஹோட்டல்கள் சங்கத் தலைவா் ஆல்வின் சகாயராஜ், வா்த்தகா் சங்க மாவட்டச் செயலா் பாலகுருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல் கட்டமாக போராட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வருகிற 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசி ரவிக்குமாா், செந்தில்நாதன் ஆகியோரை சந்தித்து மனுக் கொடுப்பது எனவும், அதன் பின்னரும் மருத்துவக் கல்லூரி சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் தொடா்ந்தால் செப்.17- ஆம் தேதி அனைத்துக் கட்சி சாா்பில் மானாமதுரை சிப்காட் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊழியா் விரோதப் போக்கில் செயல்படும் கட்டிக்குளம் சமூகநீதி விடுதிக் காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை விடுதி ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

சங்கிலி கருப்பா் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தில் சங்கிலிக் கருப்பா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை கிராம தேவதைகள் பிராா்த்தனையுடன் ... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகக் கட்டடப் பணி

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சிவகங்கை நகா் காந்தி வீதியில் மா... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை

குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள வேம்பத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை இடமாற்றம்: பொதுமக்கள் முற்றுகை

சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவக... மேலும் பார்க்க

குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க