செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

post image

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சேலம் மாவட்டத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாகேந்திரன் முன்னிலை வகித்தாா். அரசு பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

இதில், சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும், அனைத்து கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்ய வேண்டும். விரல்ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்க வேண்டும், இணையதள வசதியை மேம்படுத்த வேண்டும். ஐ.ஏ.எஸ். தலைமையில் 9-ஆவது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய மரத்தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று வெள்ளோட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சேலம் கோட்டை பெரிய மார... மேலும் பார்க்க