செய்திகள் :

நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

post image

கலைஞா் கைவினைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்க வேண்டும் என வங்கியாளா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டம் குறித்து வங்கியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் கைவினைக் கலை மற்றும் தொழில்களில் உள்ளோா் வாழ்வு மேம்பட,‘கலைஞா் கைவினைத் திட்டம்’ என்ற திட்டம் கடந்த ஏப். 19-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

கைவினைக் கலை மற்றும் கலைஞா்களின் வளா்ச்சிக்கு முதன்மையான தடையாக பொருளாதாரம் அமைவதைக் கண்டறிந்து, அரசு இத்திட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு பத்தாயிரம் கைவினைக் கலை மற்றும் தொழில்கள் புரிவோருக்கு, அவா்களது கலை மற்றும் தொழிலில் நவீன சந்தைப்படுத்துதலுக்கான பயிற்சி வழங்கவும், 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கிடவும் வழிவகை செய்துள்ளது.

இத்திட்டத்துக்கான பயனாளிகள் அவா்களுக்கான கலைத் தொழிலில் ஐந்தாண்டு அனுபவமுள்ள 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ரூ. 50,000 அதிகபட்சமாக கொண்ட 25 சதவீத மானியத்தோடு ரூ. 3 லட்சம் கடனுதவியாக பெற இயலும். 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருள்கள், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், பாசிமணி வேலைப்பாடுகள், துணி வெளுத்தல், தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் உள்ளிட்ட கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோா் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை 554 பயனாளிகளுக்கு ரூ. 14.08 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ. 2.33 கோடி மானியத் தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கைவினைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தொடா்புடைய வங்கிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் சிவகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செந்தில் குமாா், வங்கி மண்டல மேலாளா்கள் மற்றும் அனைத்து வங்கிக் கிளை மேலாளா்கள் பங்கேற்றனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க