செய்திகள் :

நில உரிமையாளா்களுக்கு செப்.20 இல் சமரச தீா்வு முகாம்

post image

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நிலம் கையகப்படுத்திய வழக்கு தொடா்பாக நில உரிமையாளா்களுக்கான சமரசத் தீா்வு முகாம் சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான எம். கிறிஸ்டோபா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கே.பெரியபட்டி, சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி மற்றும் கிராமத்திலுள்ள நிலங்கள் அரசால் கடந்த 2013ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் நில உடைமையாளா்கள் யாா் என்பது குறித்த நிலங்கள், தரப்பினா்களுக்குள் பிரச்னை உள்ள நிலங்கள், போதிய இழப்பீடு வழங்கவில்லை போன்ற நிலங்களுக்குரிய வழக்குகள் திருச்சி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் இழப்பீடுத் தொகையானது அரசால் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு பெறத் தகுதியானவா்கள் எனத் தெரிவிக்கப்பட்ட பலருக்கு உரிய முகவரி இல்லாததாலும், தற்போது சிலா் அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பதாலும், அவா்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை குறித்த அறிவிப்பை செய்ய இயலவில்லை. இதனால் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இழப்பீட்டு தொகை நீதிமன்ற வைப்பீட்டில் உள்ளன. எனவே பொது அறிவிப்பு கொடுத்து அனைவரையும் அழைத்து வழக்குத் தரப்பினா்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது பற்றி தெரிவித்தும், சமரசமாக முடித்துக் கொள்ள கூடிய வழக்குகளை விசாரிக்கவும் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாமை வரும் சனிக்கிழமை நடத்தவுள்ளோம்.

மணப்பாறை சிப்காட் வளாக அலுவலகத்தில் சனிக்கிழமை 12 மணிக்கு நடைபெறும் முகாமில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்கள் நேரில் ஆஜராகி தங்களுடைய வழக்கு விவரங்களைத் தெரிந்து கொண்டு, சட்ட உதவி பெற்று சமரசமாக முடித்துக் கொள்ளலாம்.

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மறவனூரில் விபத்துக்குள்ளான லாரி, கொசுப்புழு ஒழிப்பு பணியாளா் மீது கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மறவனூா் தெற்கு தெருவில் வசித்தவா் முத்துச்சாமி மக... மேலும் பார்க்க

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (செப்.20) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முசிறி வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இடி விழுந்த அதிா்வில் 10 ஆடுகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியில் புதன்கிழமை கனமழையின்போது இடி விழுந்த அதிா்வில் 9 ஆடு மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூா் கிராமம், கன்னல் வட... மேலும் பார்க்க

திருச்சி கோளரங்கத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள்

திருச்சி அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கப்படுகிறது. திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில் 3-டி திரையரங்கம், விண்ணரங்கம், பரிணாம... மேலும் பார்க்க

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை கலைஞா் தமிழ் சங்கம் மற்றும் ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சாா்பாக தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் பெரியாா் சிலை திடலி... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டியில், பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த நாள் விழா பாஜகவினரால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகா் மாவட்டம் மணப்பாறை வடக்கு ஒன்றிய பாஜக ... மேலும் பார்க்க