செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!

post image

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று இரு அவைகளிலும் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், கீழடி அகழாய்வு முடிவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதோடு மட்டுமின்றி, அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதனிடையே, தில்லியில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மான நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரிடம் உறுப்பினர்கள் வழங்கினர்.

இது குறித்துப் பேசிய ஜகதீப் தன்கர்,

''நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968, 31 பி பிரிவின்படி நீதிபதி வர்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான குழுவை அமைக்கக் கோரி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்த நோட்டீஸ் இன்று எனது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், அவையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான உறுப்பினர்களின் ஆதரவு போதிய எண்ணிக்கையில் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

இந்த நோட்டீஸ் மக்களவையிலும் வழங்கப்பட்டுள்ளதை சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொதுச் செயலாளருக்கு தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

Rajya Sabha receives notice for removal of Justice Varma: Dhankhar

‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்

கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா். வங்க மக்கள... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் இரங்கல்

புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்ட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: எதிா்க்கட்சிகள் அமளி- முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மக்களவை நாள் மு... மேலும் பார்க்க

பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: மக்களவையில் 16 மணி நேர விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மக்களவையில் அடுத்த வாரம் விவாதம் நடைபெறும் ... மேலும் பார்க்க

ஜிஎஸ்ஆா்இ நிறுவனத்தின் 8-ஆவது போ்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

புது தில்லி: பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனமான காா்டன் ரீச் கப்பல்கட்டுமானம் மற்றும் பொறியாளா்கள் (ஜிஆா்எஸ்இ) நிறுவனம் தயாரித்த 8-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் திங்கள்கிழமை நாட்டுக்... மேலும் பார்க்க