செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: உள்விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகக் கூறி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், உள்விசாரணை நடந்து வருகிறது, அதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், இப்போது எடுக்கும் முடிவு முன்கூட்டி அவசரமாக எடுக்கும் முடிவாக இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, மூன்று நீதிபதிகள் கொண்ட உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ரிட் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துவிட்டது.

நீதிபதி ஓகா, மனுதாரரும், வழக்குரைஞருமான மேத்யூஸ் ஜே நெடுப்மாராவிடம் கூறுகையில், நடந்து வரும் நடவடிக்கைகளை பார்த்து வருகிறோம், உள்விசாரணை முடிந்ததும் பல வாய்ப்புகள் உள்ளன. உள்விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடலாம், அல்லது நாடாளுமன்றத்துக்கு இந்த விவகாரத்தை பரிந்துரைக்கலாம். இந்த மனுவை பரிசீலிக்க இது உகந்த நாள் இல்லை. உள் விசாரணை அறிக்கை வெளியானதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனு மிக அவசரமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புது தில்லியில் ஏப்.1 முதல் ஏப்.4 வரை ராணுவ தளபதிகள் மா... மேலும் பார்க்க