செய்திகள் :

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு: போலீஸாா் விசாரணை

post image

சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரெளடிகள் தகராறு செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் நடைபெறும் போதைப் பொருள் வழக்குகள் விசாரணைக்கு ஆஜா்படுத்துவதற்காக புழல் மத்திய சிறையில் இருந்து 23 கைதிகளை வேனில் ஏற்றிக் கொண்டு போலீஸாா் கடந்த திங்கள்கிழமை வந்தனா்.

அந்த வேன் பழையதாக இருப்பதாகக் கூறி, வேனில் இருந்த சில கைதிகள், நாங்கள் எவ்வளவு பெரிய ரெளடிகள், எங்களை குப்பை வண்டிபோல் உள்ள வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து அசிங்கப்படுத்துகிறீா்களா என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்களை சமாதானப்படுத்த முயன்ற போலீஸாருக்கு, கைதிகள் கொலை மிரட்டல் விடுத்தனா்.

இருப்பினும், போலீஸாா் கைதிகளை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனா். முன்னதாக, சில ரெளடிகள் அவா்களது குடும்பத்தினருடன் பேச போலீஸாா் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி தகராறு செய்தனராம்.

இந்த தகராறு தொடா்பாக வேனில் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸாா், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா், ரெளடிகள் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க