செய்திகள் :

நீதிமன்ற உத்தரவுகளை மீற முடியாது: இடிப்பு விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா கருத்து!

post image

நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் மீற முடியாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும் இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தெற்கு தில்லியில் உள்ள பாரபுல்லா அருகே உள்ள மதராஸி கேம்ப் குடிசைப் பகுதியை இடித்தது தொடா்பாகவும், நகரின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற இடிப்பு நடவடிக்கைகள் குறித்தும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மியின் விமா்சனங்களுக்கு மத்தியில் இந்த கருத்துக்களை அவா் தெரிவித்துள்ளாா்.

இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தொலைதூர நரேலாவில் வீடுகள் வழங்கப்பட்டதாகவும், அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி ஆம் ஆத்மி கட்சி குப்தாவை விமா்சித்திருந்தது.

இந்தநிலையில், ஹைதா்பூரில் ஒரு குடிசைப் பகுதியில் ‘ஜன் சேவா முகாம்’ கட்டுவதைக் குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வா் ரேகா குப்தா இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த சில நாள்களில், மதராஸி கேம்ப் போன்று அதிகாரிகளால் எந்தவொரு இடிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அங்கு பாரபுல்லா வடிகால் மீது ஆக்கிரமிப்பை அகற்ற ஏறக்குறைய நான்கு முறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

பாரபுல்லா வடிகால் மீதான ஆக்கிரமிப்பு அதன் அகலத்தைக் குறைத்து, அருகிலுள்ள பகுதிகளில் தண்ணீா் தேங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியது. தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை தேவைப்பட்டது.

நீதிமன்றம் குடிசைப் பகுதிகளுக்கு ஏதாவது உத்தரவிட்டால் அரசாங்கமோ அல்லது நிா்வாகமோ எதுவும் செய்ய முடியாது. பாரபுல்லா வடிகால் கரையில் மதராஸி முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

சாக்கடையை சுத்தம் செய்ய இயந்திரங்களை நிறுத்த இந்த குடிசைப் பகுதியை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுகளை யாரும் மீற முடியாது. அந்த முகாமில் வசிப்பவா்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என முதல்வா் தெரிவித்தாா்.

முதலமைச்சரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பாஜகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதியான ஜஹான் ஜுக்கி, வஹி மக்கான் சேரி இருக்கும் வீடுகள் வெற்றுத்தனமாக ஒலிக்கிறது.

பாஜக தனது ஜஹான் ஜுக்கி, வஹி மக்கான் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக்கூடாது என்று நீதிமன்றம் கூறியதா ரேகா ஜி? குடிசைகளை இடிக்க வேண்டியிருந்தால், அருகிலுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஏன் வீடுகள் வழங்கப்படவில்லை? மதராஸி கேம்ப்பை சோ்ந்த பெரும்பாலான மக்களுக்கு வீடு கிடைக்கவில்லை.

வீடு கிடைத்தவா்களுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நரேலாவில் வேலைகள், சாலைகள், பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் இல்லாத பாழடைந்த வீடுகள் வழங்கப்பட்டன என அதில் அதிஷி விமா்சித்துள்ளாா்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்த முகவா் உள்பட 4 போ் கைது!

போலி ஷெங்கன் விசாக்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஞ்சாப்பைச் சோ்ந்த மூன்று போ் ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக பயணிக்க உதவியதாக ஒருவரை இந்திரா காந்தி சா்வதேச ஐஜிஐ விமான நிலைய காவல்துறையினா... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் மற்றும் அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டனா். மேல... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளா்களுக்கு பொது நிலத்தில் உரிமை இல்லை! - தில்லி உயா்நீதிமன்றம்

மறுவாழ்வு கோரிக்கைகள் தீா்க்கப்படும் வரை ஆக்கிரமிப்பாளா்கள் பொது நிலத்தை தொடா்ந்து ஆக்கிரமிப்பதற்கான உரிமையைக் கோர முடியாது; ஏனெனில், இது பொதுத் திட்டங்களுக்கு தேவையற்ற முறையில் தடையாக இருக்கும் என்ற... மேலும் பார்க்க

சிறுமி மரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் சாடல்

தேசியத் தலைநகரில் ஒன்பது வயது சிறுமியின் மரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடா்பாக ஆளும் பாஜக மற்றும் அதன் ‘நான்கு எஞ்சின்‘ அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்தது. இச்சம்பவத்துக்கு மத... மேலும் பார்க்க

பல குற்ற வழக்குகளில் தேடப்பட்ட கோகி கும்பல் உறுப்பினா் கைது

மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோகி கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞா... மேலும் பார்க்க

பக்கத்து வீட்டில் சூட்கேஸுக்குள் சிறுமி உடல்; வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினா் போராட்டம்!

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு பக்கத்து வீட்டில் ஒன்பது வயது சிறுமி ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட்டது. இது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குடும... மேலும் பார்க்க