செய்திகள் :

நீரவ் மோடியின் தம்பி நேஹல் மோடியும் மோசடி வழக்கில் கைது!

post image

இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியான நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடியும் வேறொரு மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி (41), அமெரிக்காவில் ஜூலை 4 ஆம் தேதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசு தரப்பு புகாரின்படி, வைர வியாபாரத்தில் பண மோசடி மற்றும் அதனை மறைக்க முயன்றதற்கான குற்றவியல் வழக்குகளும் (ஆதாரங்களை அழித்தல்) நேஹல் மீது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேஹல் மோடி 2.6 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ. 22.23 கோடி) அதிகமாக மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீரவ் மோடி, லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளாா்.

மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி பிரிட்டன் நீதிமன்றங்களில் நீரவ் மோடி முன்னதாக தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

Nehal Modi, brother of fugitive Nirav Modi, arrested in US

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க