செய்திகள் :

நீலகிரி கனமழை: வாகனங்கள் மீது விழுந்த மரங்கள், சுற்றுலாத் தலங்கள் தொடர்ந்து மூடல்.. நிலவரம் என்ன?

post image

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, பார்சன்ஸ் வேலி, போர்த்தி மந்து உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

ஊட்டி காமராஜர் அணை

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 207 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. சாலையோரத்தில் இருக்கும் அந்நிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் வாகனங்கள் மீது விழும் ராட்சத மரங்களால் பயணிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக தொட்டபெட்டா, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது.

மழையின் தீவிரம் தற்போதைக்கு குறைந்திருப்பதால் மண்சரிவு அபாயம் நீங்கியிருப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள், மரங்கள் அருகில் நடமாடுவதையும் வாகனங்களை நிறுத்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

வாகனம் மீது விழுந்த மரம்

மழை பாதிப்புகள் குறித்து தெரிவித்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள், " ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைக்குந்தா , கோடேரி ஆகிய பகுதிகளில் வாகனங்கள் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் மற்றும் சாலையில் விழும் மரங்களை உடனுக்குடன் வெட்டி சீரமைத்து வருகிறோம். 24 மணி நேரமும் மீட்பு வீரர்கள் தயார் நிலையில் களத்தில் உள்ளனர்" என்றனர்.

கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்.. 11 மாவட்டங்களுக்கு விடுமுறை!

கேரள மாநிலத்தில் கடந்தமாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடந்து கேரளா முழுவதும் மழை பெய்துவருகிறது. கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷா கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி மண்டலம் காரணமாக... மேலும் பார்க்க

ஊட்டியில் மீண்டும் கனமழை, அடுத்தடுத்து விழும் மரங்கள்.. பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு வாரம் பெய்த அந்த தொடர் கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.ச... மேலும் பார்க்க

Ooty : நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை, நிரம்பும் நீர்நிலைகள்!

தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என வர்ணிக்கப்படும் நீலகிரியில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி தற்போதைய புதிய திட்டங்கள் வரை பல்வேறு அணைக்கட்டுகளைத் தொடர்ந்து கட்டி வருகின்றனர். நீலகிரி மட்டுமன்றி சமவெளி பகு... மேலும் பார்க்க

நீலகிரி: நகரும் ராட்சத பாறைகள்; நிலச்சரிவு அபாயம்; போக்குவரத்துக்குத் தடை - கலெக்டர் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களில் அதிதீவிர கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்க... மேலும் பார்க்க

Rain update: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தென் மண்டல இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தகவல் இதோ...கோவை மற்ற... மேலும் பார்க்க