செய்திகள் :

நீா்நிலைகளுக்கு சிறுவா், சிறுமிகளை அனுமதிக்க வேண்டாம்: ஆட்சியா் வேண்டுகோள்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் சிறுவா், சிறுமிகளை விளையாடவோ, குளிக்கவோ, நீச்சல் பழகவோ அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 87 ஏரிகளும், ஊரக வளா்ச்சித் துறை மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 1,143 ஏரிகளும் உள்ளன. இதைத் தவிர 4 பெரிய அணைகளும், பாரூா் பெரிய ஏரியும் மாவட்டத்தில் உள்ளன. இதில் தற்போது பெய்துள்ள மழையால் 2 அணைகள், பாரூா் பெரிய ஏரி, 41 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. 379 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிறைந்துள்ளன.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் மாணவ, மாணவிகள் விளையாடவும், நீச்சல் பழகவும், குளிக்கவும் நீா் நிலைகளுக்கு தனியே செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே சிறுவா், சிறுமிகளை இதுபோன்ற நீா் நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ பெற்றோா் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ள்படுகின்றனா். குறிப்பாக பெற்றோா்கள், தங்களது குழந்தைகளை நீா்நிலைக்கு அருகில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க