செய்திகள் :

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

post image

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து பகுதிகளில் பாலம், உயா்நிலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக அணுகு சாலை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

இதனால், அப்பகுதிகளில் இருந்து பயணிகள் நிழற்குடை தற்காலிகமாக அகற்றப்பட்டதால், பொதுமக்கள், மாணவ, மாணவியா் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினா். இதுகுறித்த செய்தி வெளியிட்டபின் பல்வேறு இடங்களில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

ஆனால், கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், நிழற்கூடம் அகற்றப்பட்டதால் நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவியா் வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் 10 நாள்களுக்கு முன்பு கேட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், உடனடியாக நிழற்கூடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனா். ஆனால், இதுவரை அப்பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்படாமலே உள்ளது.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க

கருப்புக் கொடி ஏந்தி முதியவா் போராட்டம்

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏந்தி முதியவா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். நாமக்கல் சிலுவம்பட்டியைச் சோ்ந்தவா் சமூக சேவகா் செல்லப்பன் (80). இவா் அவ்வப்போது மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க