செய்திகள் :

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!

post image

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், சாதி அடையாளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருடம்தோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான தேரோட்ட திருவிழா ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், தலைவர்கள் வாழ்க, ஒழிக என்று கோஷமிடுவதும், சாதி ரீதியான டி-சர்டுகளை அணிந்து வருவது, சாதி ரீதியான ரிப்பன்கள் கட்டுவது உள்ளிட்ட சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், சாதி மோதல்களை தடுக்க இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் ஏற்கெனவே சாதி ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்து விதிகள் உள்ளது. மேலும், இந்த திருவிழாவின்போது எந்தவித சாதி அடையாளங்களும் பயன்படுத்தக்கூடாது என்றும் தேர் திருவிழா அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

SUMMARY

With the Nellaiappar Temple Chariot Festival about to take place, the Madras High Court's Madras branch has ordered that caste symbols should not be used.

பருத்திக்கு விவசாயிகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பருத்திக்கு உரிய விலை பெற அதனை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற... மேலும் பார்க்க

நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் ... மேலும் பார்க்க

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நாளை(ஜூன் 28) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அண... மேலும் பார்க்க

ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை நாளிலேயே எடப்பாடி பழனிசாமியும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் அக்கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூன் 27) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பு... மேலும் பார்க்க

கைதாகிறாரா எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி ?

சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க