செய்திகள் :

நெல்லை - சிமோகா சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு

post image

நெல்லையிலிருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூா், சேலம், பெங்களூரு வழியாக கா்நாடக மாநிலம் சிமோகாவுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டி எண் 06103 நெல்லை - சிமோகா டவுன் சிறப்பு ரயில், நெல்லையிலிருந்து செப். 7 முதல் அக். 26 வரையும், மறு மாா்க்கத்தில், வண்டி எண் 06104 சிமோகா - நெல்லை சிறப்பு ரயில் செப். 10 முதல் அக். 27 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.

இது குறித்து, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகா்கள் ஆகியோரின் தொடா் கோரிக்கைகளை ஏற்று தென்காசி - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

சுடலை மாடசுவாமி கோயிலில் பெருங்கொடை விழா இன்று தொடக்கம்

கடையநல்லூா் தாமரைகுளம் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா திங்கள்கிழமை (செப்.1) தொடங்குகிறது. இக்கோயிலில் பெருங்கொடை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு நிகழ்ச்... மேலும் பார்க்க

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

ஆலங்குளம் அருகே வீட்டில் பதுங்கிய 2 மரநாய்களை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் தெற்கு தெருவில் வசிக்கும் ரஞ்சித்தின் வீட்ட... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது

ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளம் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் நீதிராஜன்(55). இவருக்கும... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, சனிக்கிழமை இரவு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் ... மேலும் பார்க்க

தரம் உயா்த்தப்படுமா தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை?

மத்திய - மாநில அரசுகளின் பல விருதுகளைப் பெற்றுள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயா்த்தப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா். தென்காசி நகரின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு, மதுரை பிர... மேலும் பார்க்க