செய்திகள் :

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

post image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துலட்சுமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கையில் மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அப்போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் சக காவல்துறையினர் அந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர், அப்போது அந்த பெண்ணிடம் விசாரிக்கும்போது தனது பெயர் முத்துலட்சுமி என்றும் தனது கணவர் பெயர் முத்துக்குமார் என்றும் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 10 மாதமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவரின் சொந்த ஊரான வீரவநல்லூர் காவல்நிலையத்தில் எனது மீது கணவர் பொய்யான புகார் அளித்ததாகவும் இதனால் 3 வழக்குகள் என் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் பதிந்து உள்ளதாகவும், போலீஸார் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகவும் கணவரும் அவரின் அண்ணனுடன் சேர்ந்து என்னையும் எனது குழந்தைகளையும் மிரட்டுவதாகவும் தொடர்ந்து எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதாலும், பணவசதி இல்லை என்பதால் என்னால் தொடர்ந்து போராட முடியவில்லை என்றும் அழுது கொண்டே தெரிவித்தார்.

போலீஸார் விசாரணை செய்யாமல் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகவும் இறப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் எனது குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் எனது குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்து மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க

பாளை. அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பேருந்து மீது பைக் மோதியதில் காயமுற்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி புதுகாலனி பகுதியைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் சாந்தாராம் (35). தொழிலாளியான இவா், கடந்த மாா்ச் 26... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஆள்சோ்ப்பு முறையை மாற்றியமைக்கக் கோரி மனு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் என இரு உரிமங்களை வைத்திருப்பவா்கள் மட்டுமே சோ்க்கப்படுவாா்கள் என்ற விதிமுறையை மாற்றியமைக்கக் கோரி தற்காலிக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆட்சிய... மேலும் பார்க்க